பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்.

மூன்றாவது குரலிசை: தருமபுரம் ஞானப்பிரகாசம்.
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்.
 

பொழிப்புரை:

பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

குறிப்புரை:

`அவற்றையே பின்னர் பாணினி முனிவர்க்கும், அகத்திய முனிவர்க்கும் செப்பஞ் செய்யுமாறு உணர்த்தி, உலகில் பரவச்செய்தான்` என்க. `வடமொழிக்கு இந்திரனால் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமே முதல் நூல்` என்றல் பழங்கதையேயாக, உண்மையில் உள்ளது பாணினீயமே. அதனால்,
``வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்``
-காஞ்சிப்புராணம்
என்றலே சிவநெறி மரபு என்க.
பலதலைப்பட்ட உணர்வுடையராய்ப் பரந்துசென்று ஆராயும் உலகர் பொருட்டு ஆரியமொழியும், அவ்வாறன்றி ஒருதலைப்பட அமைந்த உணர்வுடையராய் ஒழுக்கத்தில் நின்று பயன்பெற விரும்பும் நல்லோர் பொருட்டுத் தமிழ்மொழியுமாக இருமொழியை இறைவன் சொல்லியருளினான் என்பது,
``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்`` -தி.10. பா.26
என நாயனார் மேலே அருளிச்செய்தவாற்றால் பெறப்படும். இவ்வாறு இவ்விருமொழியையும் ஒப்பக்கொண்டதன்றி ஒன்றை உயர்ந்ததாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் ஆன்றோர் கொண்டிலர் என்பது இதனால் பெறப்பட்டது. இங்ஙனமாகவும் சிலர் இவற்றுள் ஒன்றைப் பற்றி மற்றொன்றனை இகழ்வர். அவர், இது முதல் மூன்று திருமந்திரங்களை, `நாயனார் வாக்கல்ல` என விலக்கிச் செல்வர். அவர், ``தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர`` (தி.1 ப.77 பா.4) ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற் போல்வன வற்றையும் அவ்வாறு விலக்கிப்போவர் போலும்!
மொழிகளது நிலை, `நுண்மை, பொதுமை, இடைமை, பருமை` என நான்கு வகைப்படும். அவை முறையே, `சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி` என வடமொழியிற் சொல்லப்படும். அவற்றுள், `மத்திமை, வைகரி` எனப்படுகின்ற இடைமொழி பரு மொழிகள் தாம் ஆரியம், தமிழ் முதலிய பாகுபாடுகளைப் பெற்று நிற்கும். அவற்றிற்கு முந்திய நிலைகள் பாகுபாடின்றியே விளங்கும். அவற்றுள் பிரணவர் முதலியோரும் அனந்த தேவரும் ஆகமங்களைப் பெற்றது `சூக்குமை` எனப்படும் நுண்மொழியினாலாம். சீகண்டர் பெற்றது `பைசந்தி` என்னும் பொதுமை மொழியால். சீகண்டரிட மிருந்து நந்தி முதலிய கணங்கள், தேவர், முனிவர், சித்தர் பெற்றது இடைமொழியாகிய மத்திமையினால். அவர்களிடமிருந்து மக்கள் பெற்றது `வைகரி` எனப்படும் பருமொழியினால். `சிலர்க்கு இயல் பாகவே மெய்யுணர்வு உண்டாயிற்று` என்றல் இறைவன் உள்நின்று நுண்மொழி இடைமொழிகளால் விளக்கியதே என்க. அதனால், கணங்கள் முதலியோர் பொருட்டே பாகுபட்ட மொழிகளை இறைவன் சொல்லினன்` எனக் கொள்க. இவற்றுள், இடைமொழிக்கு (மத்தி மைக்கு) முற்பட்டவற்றையே, ``சொற்பிரிவிலாத மறை`` (தி.3 ப.78 பா.2) என்று திரு ஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அதற்கு இவ்வாறு பொருள் கொள் ளாது `சொற்கள் நீங்காது நிற்கின்ற மறை` என உரைப்பின் பொருள் படாமை அறிக. ``எழுதா மறை`` எனப்படுவதும் இச்சொற்பிரிவிலாத மறையே. அதனையே ஆரிய வேதத்திற்கு மரபாகக் கொண்டனர் அந்தணர். `எழுதா மறை` என்பதற்கு, `எழுத வாராத மறை` என்பதே பொருளன்றி, `எழுதாமல் இருப்பதையே மரபாகக் கொண்ட மறை` என்பது பொருளாகாது.
``ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றிஉரைத் தேட்டின் புறத்தெழுதார்`` -திருவள்ளுவமாலை. 15
என்ற செய்யுளும், `எழுதப்படுவதனை எழுதாதிருக்கின்றனர் அந்தணர்` என்றே கூறிற்று. எனவே, `எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை` (தி.12 பெ.பு.ஞானசம். 75) என்பதில், `எழுது மறை` என்றது, `சொற்பிரிவிலாத மறையைத் `தமிழ்` என `ஒரு மொழியாய்ப் பிரிந்து தோன்றி எழுதப்படுமாறு வைத்த மறை` என்றவாறாயிற்று.
இதனால், மேலுலகத்தில் பிரணவர் முதலியோர்க்குச் சொல்லிய ஆகமங்கள் கீழுலகத்தார்க்கு விளங்குதற்பொருட்டு இறைவன் பருமொழிகளைப் படைத்தமை கூறப்பட்டது. `ஆகமங்கள் விளங்குதற்பொருட்டே மொழிகளைப் படைத்தான்` என்றமையால், அம்மொழிகளில் அவ்வாகமங்களை அவன் கூறினமையும் பெறப்படும்.
``மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்``
-தி.8 திருவாசகம். கீர்த்தி. 9. 10
``கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்``
-தி.8 திருவாசகம் கீர்த்தி. 16. 20.
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுதே
தெள்ளும் வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.
-தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 50.
என்றாற்போல வருவன பலவும் சிவபெருமான் தனது ஆகமங்களைப் பருமொழியால் விளக்கிய வரலாற்றைக் குறிப்பனவேயாம். இறைவன் படைத்த பருமொழியை இந்நாயனார், `ஆரியம், தமிழ்` என இரண்டாகக் கூறினமையின், ஆகமங்கள் அவ் இருமொழியிலும் கூறப்பட்டன என்றல் பொருந்துவதே என்க. இதனானே, பிறநெறிகள்யாவும், `ஆரியம் ஒன்றே கடவுள்மொழி; தமிழ் முதலிய பிறமொழிகள் யாவும் தேசியம் - அஃதாவது அவ்வந் நிலப்பகுதியில் வாழும் மக்கட்கு அமைந்த மொழி` என்னுமாயினும், சிவநெறி, ஆரியம் தமிழ் இரண்டையுமே கடவுள்மொழி என ஒப்பக்கொள்வது என்பது பெறப்பட்டது. இந்நாயனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பின் பிறர் சிலரும் இவ்வாறு கொண்டனர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వర్ష, గ్రీష్మ, మంచుకురిసే చలికాలం మొదలైనవి అణగి సర్వమూ నీటిమయ మయ్యే ప్రళయ సమయంలో సంస్కృత ద్రావిడ భాషల్లో వేదాలను శివుడు ఉమాదేవికి బోధించాడు. తల్లి ద్వారా శిశువులు ప్రాథమిక జ్ఞానం పొందినట్లే జగన్మాత అయిన ఉమాదేవి ప్రపంచానికి వేద జ్ఞానాన్ని అందించింది.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
जब वर्षा और ग्रीष्म ऋतु और देर तक होने वाले
ओस कणों वाली शरद ऋतु जैसे झीलों को पूर्ण कर देती है,
उसी समय शिव ने महान शक्ति माँ की अनुकम्पा से प्रेरित होकर,
एक ही साथ संस्कृत और तमिळ में इन अमूल्य रत्नों को व्यक्त किया |

- रूपान्तरकार शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Revealed Alike In Sanskrit and Tamil

When rain and summer and long drawn dews stay occuring,
And when they sustain the lakes,
Then did He in Sanskrit and Tamil at once,
Reveal the rich treasure of His compassion to our Mother Great.
Translation: B. Natarajan (2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀓𑁄𑀝𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀸𑀭𑁆𑀧𑀷𑀺 𑀢𑀽𑀗𑁆𑀓𑀦𑀺𑀷𑁆
𑀶𑁂𑀭𑀺𑀬𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀗𑁆 𑀓𑀺𑀴𑁃𑀓𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀓𑀸𑀮𑀢𑁆𑀢𑀼
𑀆𑀭𑀺𑀬 𑀫𑀼𑀫𑁆𑀢𑀫𑀺 𑀵𑀼𑀫𑁆𑀉𑀝 𑀷𑁂𑀘𑁄𑁆𑀮𑀺𑀓𑁆
𑀓𑀸𑀭𑀺𑀓𑁃 𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀓𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মারিযুম্ কোডৈযুম্ ৱার্বন়ি তূঙ্গনিন়্‌
র়েরিযু নিণ্ড্রঙ্ কিৰৈক্কিণ্ড্র কালত্তু
আরিয মুম্তমি ৰ়ুম্উড ন়েসোলিক্
কারিহৈ যার্ক্কুক্ করুণৈসেয্ তান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே 


Open the Thamizhi Section in a New Tab
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே 

Open the Reformed Script Section in a New Tab
मारियुम् कोडैयुम् वार्बऩि तूङ्गनिऩ्
ऱेरियु निण्ड्रङ् किळैक्किण्ड्र कालत्तु
आरिय मुम्तमि ऴुम्उड ऩेसॊलिक्
कारिहै यार्क्कुक् करुणैसॆय् ताऩे 

Open the Devanagari Section in a New Tab
ಮಾರಿಯುಂ ಕೋಡೈಯುಂ ವಾರ್ಬನಿ ತೂಂಗನಿನ್
ಱೇರಿಯು ನಿಂಡ್ರಙ್ ಕಿಳೈಕ್ಕಿಂಡ್ರ ಕಾಲತ್ತು
ಆರಿಯ ಮುಮ್ತಮಿ ೞುಮ್ಉಡ ನೇಸೊಲಿಕ್
ಕಾರಿಹೈ ಯಾರ್ಕ್ಕುಕ್ ಕರುಣೈಸೆಯ್ ತಾನೇ 

Open the Kannada Section in a New Tab
మారియుం కోడైయుం వార్బని తూంగనిన్
ఱేరియు నిండ్రఙ్ కిళైక్కిండ్ర కాలత్తు
ఆరియ ముమ్తమి ళుమ్ఉడ నేసొలిక్
కారిహై యార్క్కుక్ కరుణైసెయ్ తానే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාරියුම් කෝඩෛයුම් වාර්බනි තූංගනින්
රේරියු නින්‍රඞ් කිළෛක්කින්‍ර කාලත්තු
ආරිය මුම්තමි ළුම්උඩ නේසොලික්
කාරිහෛ යාර්ක්කුක් කරුණෛසෙය් තානේ 


Open the Sinhala Section in a New Tab
മാരിയും കോടൈയും വാര്‍പനി തൂങ്കനിന്‍
റേരിയു നിന്‍റങ് കിളൈക്കിന്‍റ കാലത്തു
ആരിയ മുമ്തമി ഴുമ്ഉട നേചൊലിക്
കാരികൈ യാര്‍ക്കുക് കരുണൈചെയ് താനേ 

Open the Malayalam Section in a New Tab
มาริยุม โกดายยุม วารปะณิ ถูงกะนิณ
เรริยุ นิณระง กิลายกกิณระ กาละถถุ
อาริยะ มุมถะมิ ฬุมอุดะ เณโจะลิก
การิกาย ยารกกุก กะรุณายเจะย ถาเณ 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာရိယုမ္ ေကာတဲယုမ္ ဝာရ္ပနိ ထူင္ကနိန္
ေရရိယု နိန္ရင္ ကိလဲက္ကိန္ရ ကာလထ္ထု
အာရိယ မုမ္ထမိ လုမ္အုတ ေနေစာ့လိက္
ကာရိကဲ ယာရ္က္ကုက္ ကရုနဲေစ့ယ္ ထာေန 


Open the Burmese Section in a New Tab
マーリユミ・ コータイユミ・ ヴァーリ・パニ トゥーニ・カニニ・
レーリユ ニニ・ラニ・ キリイク・キニ・ラ カーラタ・トゥ
アーリヤ ムミ・タミ ルミ・ウタ ネーチョリク・
カーリカイ ヤーリ・ク・クク・ カルナイセヤ・ ターネー 

Open the Japanese Section in a New Tab
mariyuM godaiyuM farbani dungganin
reriyu nindrang gilaiggindra galaddu
ariya mumdami lumuda nesolig
garihai yarggug garunaisey dane 

Open the Pinyin Section in a New Tab
مارِیُن كُوۤدَيْیُن وَارْبَنِ تُونغْغَنِنْ
ريَۤرِیُ نِنْدْرَنغْ كِضَيْكِّنْدْرَ كالَتُّ
آرِیَ مُمْتَمِ ظُمْاُدَ نيَۤسُولِكْ
كارِحَيْ یارْكُّكْ كَرُنَيْسيَیْ تانيَۤ 



Open the Arabic Section in a New Tab
mɑ:ɾɪɪ̯ɨm ko˞:ɽʌjɪ̯ɨm ʋɑ:rβʌn̺ɪ· t̪u:ŋgʌn̺ɪn̺
re:ɾɪɪ̯ɨ n̺ɪn̺d̺ʳʌŋ kɪ˞ɭʼʌjccɪn̺d̺ʳə kɑ:lʌt̪t̪ɨ
ˀɑ:ɾɪɪ̯ə mʊmt̪ʌmɪ· ɻɨmʉ̩˞ɽə n̺e:so̞lɪk
kɑ:ɾɪxʌɪ̯ ɪ̯ɑ:rkkɨk kʌɾɨ˞ɳʼʌɪ̯ʧɛ̝ɪ̯ t̪ɑ:n̺e 

Open the IPA Section in a New Tab
māriyum kōṭaiyum vārpaṉi tūṅkaniṉ
ṟēriyu niṉṟaṅ kiḷaikkiṉṟa kālattu
āriya mumtami ḻumuṭa ṉēcolik
kārikai yārkkuk karuṇaicey tāṉē 

Open the Diacritic Section in a New Tab
маарыём коотaыём ваарпaны тунгканын
рэaрыё нынрaнг кылaыккынрa кaлaттю
аарыя мюмтaмы лзюмютa нэaсолык
кaрыкaы яaрккюк карюнaысэй таанэa 

Open the Russian Section in a New Tab
mah'rijum kohdäjum wah'rpani thuhngka:nin
reh'riju :ninrang ki'läkkinra kahlaththu
ah'rija mumthami shumuda nehzolik
kah'rikä jah'rkkuk ka'ru'näzej thahneh 

Open the German Section in a New Tab
maariyòm kootâiyòm vaarpani thöngkanin
rhèèriyò ninrhang kilâikkinrha kaalaththò
aariya mòmthami lzòmòda nèèçolik
kaarikâi yaarkkòk karònhâiçèiy thaanèè 
maariyum cootaiyum varpani thuungcanin
rheeriyu ninrhang cilhaiiccinrha caalaiththu
aariya mumthami lzumuta neecioliic
caarikai iyaariccuic carunhaiceyi thaanee 
maariyum koadaiyum vaarpani thoongka:nin
'raeriyu :nin'rang ki'laikkin'ra kaalaththu
aariya mumthami zhumuda naesolik
kaarikai yaarkkuk karu'naisey thaanae 

Open the English Section in a New Tab
মাৰিয়ুম্ কোটৈয়ুম্ ৱাৰ্পনি তূঙকণিন্
ৰেৰিয়ু ণিন্ৰঙ কিলৈক্কিন্ৰ কালত্তু
আৰিয় মুম্তমি লুম্উত নেচোলিক্
কাৰিকৈ য়াৰ্ক্কুক্ কৰুণৈচেয়্ তানে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.